News September 8, 2025
கரூரில் போலீஸ் உத்தரவை மதிக்காத டிரைவர்கள்!

கரூரில் மினி பஸ் ஸ்டாண்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்தி செல்வதால், மனோகரா கார்னார் சிக்னல் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி மினி பஸ்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
கரூர்: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி!

கரூர்: வேலாயுதம்பாளையம், கோலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் நேற்று(செப்.8) பழத்துறை ராஜா வாய்க்கால் பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 9, 2025
கரூர்: கணவனுக்கு வேலை போனதால் மனைவி தற்கொலை

கரூர்: குளித்தலை அருகே வாத்திகவுண்டனூரைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை. இவரது மனைவி ராஜேஸ்வரி(38). இவர் தாசில் நாயக்கனூர் பகுதியில் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது கணவர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து கடந்த 7 மாதங்களாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன விரக்த்தியில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News September 9, 2025
கரூர்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <