News September 8, 2025
கோவில்பட்டியில் 2 போலீசார் சஸ்பெண்ட்

கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவு எஸ்ஐ செல்வகுமாரும், அதே பிரிவில் காவலராக உள்ள இந்திரா காந்தியும் நெருங்கி பழகிய நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரை நெல்லை சரக டிஐஜி சஸ்பெண்ட் செய்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பட் ஜான் இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 9, 2025
தூத்துக்குடி: 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை வழக்குகளில் போலீசார் விசாரணை நடத்தி அதற்கான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் பல்வேறு கொலை வழக்குகள் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
கோவில்பட்டி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேசன் (47) என்பவர் தச்சு தொழிலாளியாக உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சுமை ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 9, 2025
தூத்துக்குடி: உளவுத் துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!