News September 8, 2025

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 2 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வுகளுக்கான, கட்டணமில்லா மாதிரித்தேர்வு இன்று (செப்.,8) காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை முடிய மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு வினாத் தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

திருச்சி: இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

image

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முத்தரசநல்லூர் பேரிகார்டு அருகே, எதிரெதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முத்தரசநல்லூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 9, 2025

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு

image

திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் கடந்த செப்.,6-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 9, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 426 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு கோரிக்கை, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட 426 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!