News September 8, 2025
கிருஷ்ணகிரி: நிலத் தகராறு – இருதரப்பு மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள சவுக்குகோட்டை கிராமத்தில், நிலத் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைச் சாதிப் பிரச்சினையாக மாற்றும் முயற்சியில், விசிக ஒன்றியச் செயலாளர் புலி என்ற ராஜேஷ் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Similar News
News September 8, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியாகி உள்ளது. பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் மாவட்ட பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News September 8, 2025
கிருஷ்ணகிரியில் புதிய நிர்வாகிகள் நியமனம்

இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் சேவைக்காக பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட தலைவர் V.S. கவியரசு வாழ்த்துத் தெரிவித்தார்.
News September 8, 2025
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

செப்டம்பர் 11 காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் ஓசூர் வரும் முதல்வர் ஸ்டாலின், 12 pm விஸ்வநாதபுரம் எல்கார்ட் பகுதியில் புதிய தொழில் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 2 pm ஓசூர் எம்எல்ஏ இல்லத்தில் மதிய உணவு, 4 pm தளி சாலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், 5.30 pm குருபரப்பள்ளி டெல்டா யூனிட் துவக்கி வைத்து, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே ரோடு ஷோ நடத்தி, பர்கூர் எம்எல்ஏ இல்லத்தில் இரவு தங்குகிறார்.