News September 8, 2025
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும், இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் மகளிருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
Similar News
News September 9, 2025
தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
News September 9, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன. *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை.
News September 9, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த பிரபலம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துவேல் பாண்டியனின் ப்ரீக்வெல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சிவராஜ் குமார் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை இந்த வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள நெல்சன், படத்தில் இன்னும் பல பிரபலங்களை நடிக்க வைத்துள்ளாராம். இப்படத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேமியோ யார்?