News September 8, 2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 9, 2025

“கிராம உதவியாளா் பணிகளுக்கான திறனறிவுத் தோ்வு”

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான திறனறிவுத் தோ்வு (செப்.08) தொடங்கியது. “இதில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதற்கட்டமாக வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தோ்வு வட்டாட்சியா் சு.மோகனராமன் முன்னிலையில் தொடங்கியது. இந்த தோ்வுப் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமான தோ்வு வரும் செப். 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News September 9, 2025

தி.மலையில் மக்கள் குறைதீா் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் (செப்.08) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம்
வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

error: Content is protected !!