News September 8, 2025

தருமபுரி: இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலி!

image

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி நெடுஞ்சாலையில், மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஜிட்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வைகுந்தன் (28) பலத்த காயமடைந்தார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த நிலையில் இவர் பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

தருமபுரி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தருமபுரி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

BREAKING: தருமபுரி – இ.பி.எஸ் சுற்றுப்பயண தேதியில் மாற்றம்

image

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் , தருமபுரி மாவட்டத்தில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த எடப்பாடி பழனிசாமி, அதனை செப்.29, 29 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

தருமபுரியில் ஒரே நாளில் 1275 வழக்குகளுக்கு தீர்வு

image

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1157 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கிக் கடன் தொடர்பான 150 வழக்குகளில், 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக, 1275 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு நீதி கிடைத்தது.

error: Content is protected !!