News September 7, 2025
மயிலாடுதுறை: பெல் நிறுவனத்தில் வேலை

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
Similar News
News September 9, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, பொறையார், செம்பனார்கோயில், சீர்காழி, திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News September 9, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். சுற்றுலாஆப்ரேட்டர்கள் விமான நிறுவனங்கள் உணவகங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப். 15க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News September 9, 2025
மயிலாடுதுறை: பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான இங்கு பவித்ரோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. பெருமாள் நாங்கூர் மணிகர்ணிகா காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.