News September 7, 2025
பண்ருட்டி: ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினைப் பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சிஎன்றும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.
Similar News
News September 8, 2025
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்ன கண்ணாடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் எல்லைப்பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
கடலூர்: கட்டணம் இன்றி வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
▶️கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04142-212660
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
பண்ருட்டி அருகே ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

பண்ருட்டி – திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று (செப்.7) ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.