News September 7, 2025
புதன்கிழமை பள்ளிகளுக்கு… வந்தது அறிவிப்பு!

அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் MBC, சீர்மரபினர் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவிகளின் வங்கி கணக்கு, ஆதார் உள்ளிட்ட விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 1.20 லட்சம் மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவாகவில்லை என்றும் அதனை செப்.10-க்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
ரயில்வேயில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10th, 12th அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15 முதல் 24 வரை ஆகும். இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News September 8, 2025
CM ஸ்டாலின் மீது இயக்குநர் கடும் விமர்சனம்

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உழைக்கும் மக்களாகிய தூய்மை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க CM ஸ்டாலின் காவல்துறையை ஏவி அவர்களை அடித்து விரட்டியதாக சாடியுள்ளார். CM ஸ்டாலினை போலி சமூகநீதி முதல்வர் என்று லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
கேப்டனை திட்டி வளர்ந்தவர் சீமான்: விஜய பிரபாகரன்

சீமான் டிரெண்டிங்கில் இருக்கும் நபர்களை திட்டுபவர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த கேப்டனை திட்டி சீமான் பெரிய ஆளாகினார் எனவும் பிறரை திட்டியே வாக்குகளை பெற்று கட்சியை வளர்த்தார் என்றும் கூறினார். மேலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என விஜய பிரபாகரன் பேசினார்.