News September 7, 2025
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறிய 1,027 பேர் மீது வழக்கு

ஈரோடு மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம், மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 49 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 445 வழக்கு உள்பட, 1,027 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, மது போதையில் வாகனம் ஓட்டிய, 25 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தனர்.
Similar News
News September 8, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.9) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம், கள்ளிபாளையம், டாணாபுதூர், ஆலத்தூர், காராப்பாடி, பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம், நல்லூர், செல்லம்பாளையம், தாசம்பாளையம், ஆலம்பாளையம், கணுவக்கரை மற்றும் ஆம்போதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
ஈரோடு மக்களே: நம்ம ஊருக்கு வருது டைடல் பார்க்!

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க டைடல் பூங்கா திட்ட, வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது, இதன்மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஈரோடு மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 8, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகள் படிக்க வாய்ப்பு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் , ஈ.சி.ஜி, எலும்பு முறிவு போன்ற துறைகளில் படிப்புகளுக்கு காலியாக இடங்கள் உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.