News September 7, 2025
விழுப்புரம் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சரியாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கிகள் கடனுதவி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News September 8, 2025
விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

விழுப்புரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<
News September 8, 2025
விழுப்புரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

விழுப்புரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செஞ்சியில் 41 மி.மீ. மழையும், வல்லத்தில் 34 மி.மீ. மழையும் பெய்தது. முண்டியம்பாக்கத்தில் 23 மி.மீ., நேமூர், அனந்தபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கோலியனூரில் 17 மி.மீ. மழையும், வளவனூரில் 16 மி.மீ. மழையும், கெடாரில் 14 மி.மீ. மழையும், திண்டிவனத்தில் 12 மி.மீ. மழையும் பதிவானது. வானூரில் 9 மி.மீ.,விழுப்புரத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.