News September 7, 2025

ராம்நாட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரத்தில் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News September 8, 2025

பரமக்குடி அருகே சாலை விபத்தில் மனைவி பலி

image

பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்துரைச் சேர்ந்த தம்பதி மதன் – சங்கீதா இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மதுரையில் நேற்று இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது கமுதக்குடியில் கால்வாய் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 8, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையம்

image

தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில், சிறந்த காவல் நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும், முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையம், 2023 ஆம் ஆண்டிற்கான, சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சரின் கேடயம் பெற்றது. கேடயத்தை கமுதி, சார்புஆய்வாளர் சக்திகணேஷ், பெற்றுக்கொண்டார்.

News September 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!