News September 7, 2025
பெற்றோருடன் நேரம் செலவிட இனி அரசு விடுமுறை

அசாமில், பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் ‘Matri Pitri Vandana’ திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி நவ.14, 15-ம் தேதிகளில் ஊழியர்கள், தங்கள் சிறப்பு விடுமுறையை விதிகளுக்கு உள்பட்டு விண்ணப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குடும்பத்துடனான பிணைப்பை அதிகரித்து, ஊழியர்கள் மன தெளிவுடன் பணிபுரிவர் என கூறப்படுகிறது. இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமா?
Similar News
News September 8, 2025
கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 8, 2025
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
வேளாண் விஞ்ஞானி R.S.நாராயணன் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. #RIP