News September 7, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், 33 பேருக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை, கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், 8 மாற்றுத்திறனாளிகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 43 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News September 8, 2025

கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.09.2025) நடைபெற்றது.

News September 8, 2025

ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், 2025-26ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்ற, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) திங்கள் கிழமை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் உடன் இருந்தார்.

News September 8, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

error: Content is protected !!