News September 7, 2025
தி.மலை: டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தி.மலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செப்.5 தேதி இரவு மது வாங்க வந்தவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில்லறை தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த இளைஞர் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பற்ற வைத்து கடைமீது வீசினார். இதனால் அங்கு தீப்பற்றி எரிந்த நிலையில், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் பிரதீப் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
தி.மலை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

தி.மலை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சுற்றுலா விருதுகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். மொத்தம் 15 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளுக்கு <
News September 8, 2025
தி.மலை: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.