News September 7, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News September 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News September 8, 2025
நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டிலான 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50% மானியத்துடன் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,தோட்டக்கலை துணை இயக்குனர் சிந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
இராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (08.09.2025) இரவு காவல் ரோந்து பணி நடைபெறுகிறது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் ராணிப்பேட்டை, ஆரக்கோணம், பனவரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டுடன் பணியாற்றி வருகிறது. அவசர எண்கள்: 9884098100, 04172-290961.