News September 7, 2025
ஈரோடு மாவட்ட போலீசார் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். இந்தத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டக் காவல்துறை ஒரு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 96552 20100 அழைக்கவும்.(SHARE பண்ணுங்க)
Similar News
News September 8, 2025
ஈரோடு: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

ஈரோடு மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 8, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை ALERT!

ஈரோடு மக்களே இணைய வாயிலாக பல மோசடிகள் நடந்து வருகிறது, அதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது வேலைவாய்ப்பு, யூட்யூப் லைக், ரேட்டிங், டெலிகிராம் டாஸ்க் என தங்கள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. உதவிக்கு மாவட்ட எஸ்பி எண் 0424-2260100 (அ ) 1930 அழைக்கவும்.
News September 7, 2025
ஈரோடு: தங்கம், பணம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க.!