News April 10, 2024
ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது

பரந்தூர் மக்களிடம் காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரி பேச்சு நடத்துவார் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள், அதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை கைவிட மக்களிடம் பேசுவோம் எனக் கூறிய சாகு, அதன் பிறகும் தேர்தலை புறக்கணித்தால் ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது எனக் கூறினார்.
Similar News
News March 11, 2026
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி காயமா?

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, US தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு டிவி சேனல் அவரை ‘ரமலானின் சான்பாஸ்’ (காயமடைந்த போர்வீரன்) என்று குறிப்பிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர் தலைவர் தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News March 11, 2026
ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


