News September 7, 2025

பஸ் ஓட்டுனர் தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு!

image

சேலம்; ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சக்திவேல் என்பவரை சதீஷ்குமார், ராஜ்குமார், பரமசிவம், மற்றும் தங்கதுரை ஆகிய நான்கு பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆத்தூர் நகர போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News September 9, 2025

சேலம் : இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், செப்டம்பர் 8 இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபடும் பகுதிகள்: சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி. பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவிக்க, இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News September 8, 2025

சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா வரும் செப்.24- ஆம் தேதி தொடங்கி அக்.02- ஆம் தேதி வரை திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் 13 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 08.00, 09.00, 10.00 மணிக்கும், இரவு 09.00, 09.30, 10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது.

News September 8, 2025

சேலம்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!