News September 7, 2025
USA உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு, USA 50% வரி விதித்ததில் இருந்தே இரு நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான கருத்துகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், USA உடனான நல்லுறவுக்கு PM மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக EAM ஜெய்சங்கர் கூறியுள்ளார். ட்ரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்று டிரம்ப் பேசியிருந்தார்.
Similar News
News September 8, 2025
மிஷ்கினால் கண்கலங்கிய பெற்றோர்

மாணவியின் கல்விச் செலவை ஏற்ற இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மிஷ்கின், அதில் போட்டியாளரான திஷாதனாவின் நான்கரை ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். மேலும் திஷாதனாவிடம் அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும் தானே மாஸ்டர்ஸ் படிப்பதற்கான பணத்தை கட்டுவதாகவும் உறுதியளித்தார். இதை கேட்ட திஷாதனாவின் பெற்றோர்கள் கண் கலங்கினர்.
News September 8, 2025
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.