News September 7, 2025
திருமலை கோயில் வரும் பக்தர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் நாளை சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல் மலை பாதைக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை (செப்டம்பர் 7) திருமலை கோயில் வரும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 8, 2025
தென்காசி: இங்கே உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு!

தென்காசி மாவட்ட வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை, சிறுபான்மையினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மாவட்ட வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி, நெடுஞ்சாலை, மகளிர் திட்டம், அறநிலையத்துறை உட்பட 19 துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த லிங்கில்<
News September 8, 2025
தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் (06061) புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது. மறுமார்க்கமாக (06062) வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. ஏசி, ஸ்லீப்பர், பொதுப்பெட்டிகள் உள்ள இந்த ரயிலை நிரந்தரமாக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
தென்காசி: மின்தடை செய்யப்படும் இடங்கள்

நாளை(செப்.9) தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை, சக்தி நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர், மாறாந்தை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும். செப்.10ம் தேதி கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், இடையான்குளம், சென்னிகுளம், காரிசாத்தான், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிக்காக இந்த மின்தடை அறிவிப்பு. *ஷேர்