News September 6, 2025

அரூர்: உயர்கல்விக்கு சேராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில், 2022 முதல் 2025 வரை 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு சேராத மாணவ, மாணவிகளுக்காக, தமிழக அரசின் ‘உயர்வுக்கு படி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 8-ம் தேதி அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News September 8, 2025

தருமபுரி மக்களே விலை தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்று (செப்டம்பர்-8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.22, வெண்டைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ.15, முருங்கைக்காய் ரூ.55, பச்சைமிளகாய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.28, இஞ்சி ரூ.88, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.58, பீட்ரூட் ரூ.28, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.

News September 8, 2025

தர்மபுரி மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ தாலுகா: 7
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 10
▶️ வருவாய் கிராமங்கள்: 470
▶️ நகராட்சிகள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ பேரூராட்சிகள்: 10 (கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாளையம், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பி. மல்லாபுரம், கூத்தப்பாடி)
▶️ கிராம ஊராட்சிகள்: 251

News September 8, 2025

தர்மபுரி: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

image

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எண்டப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகன் (49), செல்வம் (60), மாது (56) ஆகிய மூவரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகளும், ₹150 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!