News April 10, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை குறித்து தகவல் இல்லை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Similar News

News November 10, 2025

மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

News November 10, 2025

மயிலாடுதுறை: கல் வீசிய கைக்கு மாவுக்கட்டு!

image

பொறையார் அரசலங்குடி பகுதியில் பள்ளி வாகனத்தை உடைத்து சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தாமரைச்செல்வன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷ் (20), கபிலன் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது ஆகாஷ் தப்பி செல்ல முற்பட்டபோது, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

News November 10, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!