News September 6, 2025
காட்பாடி 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் இன்று (செப்டம்பர் 06) காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் பவாட்டி (40) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
வேலூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

வேலூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
வேலூர்: இருசக்கர வாகன விபத்து

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மினி டாடா ஏஸ் மீது, இன்று (செப்.8) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 8, 2025
வேலூர்: WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.