News September 6, 2025
அமைதி காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து <<17629139>>EPS நீக்கினார்<<>>. இதனால் அரசியல் களம் பரபரப்பில் இருந்தாலும், கட்சித் தொண்டர்கள் அமைதியாகவே உள்ளனர். வெளியிலுள்ள அதிருப்தியாளர்களை தவிர்த்து, அதிமுக முக்கிய தலைவர்களும் அமைதி காக்கின்றனர். கட்சிக்குள் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனில், செங்கோட்டையன் முடிவு என்னாகும்? உங்கள் கருத்து?
Similar News
News April 11, 2026
தமிழகம் வரும் பிரதமர் மோடி

ஏப்.15-ம் தேதியன்று நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். வேப்பமூடு பகுதியிலிருந்து வடசேரி வரை ரோடு ஷோ செய்கிறார். பின்னர், குமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்து, அங்கிருந்து போலீஸ் ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார். கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக மோடி தமிழகம் வருகிறார்.
News April 11, 2026
நிலவை விற்று ₹100 கோடி சம்பாதித்த நபர்..

சாதாரண கார் விற்பனையாளராக இருந்த ஒருவர் நிலவை விற்று கோடிகள் சம்பாதித்த கதை சினிமாவை விட சுவாரஸ்யம். 1980-ல் டென்னிஸ் ஹோப் என்பவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிலவை தன்னுடையது என அறிவித்தார். பிறகு, ‘Lunar Embassy’ நிறுவனத்தை உருவாக்கி நிலவை Plot போட்டு விற்று ₹100 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். ஆனால் இது சட்டபூர்வமாக செல்லாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 11, 2026
இலவசம் வேண்டாம்! தேர்தல் களத்தில் இறங்கிய தாய், மகள்

தேர்தல் வந்துவிட்டாலே, வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி, இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக வாக்குறுதி தரும் திறனற்ற அரசியலை எதிர்ப்பதாக கூறி, தாயும் மகளும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். CM போட்டியிடும் கொளத்தூரில் மகள் ஸ்டெபியும், ஆலந்தூரில் தாய் செங்கொடி விஜயலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.


