News April 10, 2024
கச்சத்தீவு மீட்பே ஒரே வழி

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி என ஓபிஎஸ் கூறியுள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.
Similar News
News August 11, 2025
பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
ஆண்டில் 300 நாள்கள் தூங்கும் மனிதர்

நல்ல தூக்கத்துக்காக பலர் ஏங்க, ராஜஸ்தானை சேர்ந்த புர்க்காராமுக்கு (46) தூக்கமே சாபமாகிவிட்டது. தன் 23-வது வயது முதல் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட இவரால், ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விழித்திருக்க முடிகிறது. மீதி 25 நாள்கள் தொடர்ச்சியான தூக்கத்தில் கழிகிறது. இவர் தூக்கத்தில் இருக்கையில், குடும்பத்தினரே அவருக்கு உணவூட்டுவது, குளிக்க வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர்.
News August 11, 2025
ஆக. 21ல் தவெக மாநாடு நடப்பது உறுதி

தவெகவின் 2-வது மாநாட்டை ஆக.25-ம் தேதி மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக (விநாயகர் சதுர்த்தி) அன்றைய தேதியில் போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் மாநாட்டு தேதியை மாற்றுமாறு போலீஸ் அறிவுறுத்தியது. இதனையடுத்து, ஆக. 21-ல் மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார். அன்றைய தினத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ள தற்போது போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.