News September 6, 2025
அம்பேத்கர் விருது: விழுப்புரம் ஆட்சியர் செய்தி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
விழுப்புரம்: அவசர கால உதவி எண்கள் இதோ!

விழுப்புரம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
விழுப்புரம் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சரியாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கிகள் கடனுதவி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென அறிவுறுத்தினார்.
News September 7, 2025
விழுப்புரம்: தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, நமது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி அலுவலகங்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.
▶️ விழுப்புரம் – 04146-222206
▶️ திண்டிவனம் – 04147-222073
▶️ கோட்டக்குப்பம் – 0413-2237062
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க