News September 6, 2025
வடலூர்: ஐயன் ஏரி புணரமைக்கும் பணி ஆய்வு

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஐயன் ஏரி புணரமைக்கும் பணியினை வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் இன்று (செப்.06) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News March 20, 2026
கடலூர் முழுவதும் 261.2 மி.மீ மழை பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 261.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் வேப்பூர் 78 மில்லி மீட்டர், லக்கூர் 60 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 44 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 36 மில்லி மீட்டர், பெலாந்துறை 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News March 20, 2026
சட்டமன்றத் தேர்தல் காவல்துறை பார்வையாளர் நியமனம்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்க காவல்துறை பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவ்வகைய்ல், கடலூர் மாவட்ட காவல்துறை பார்வையாளராக ஹேமந்த் குட்டியால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 8300697288 என்ற எண்ணில் அவரிடன் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


