News September 6, 2025
போளூர் காவல் நிலையத்திற்கு அங்கீகாரம்

தமிழகம் முழுவதும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் தி.மலை மாவட்டம், போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை வழங்க உள்ளார். தற்போது காவலர்கள் பலரும் போளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 6, 2025
தி.மலை: மனத்துயரம் நீக்கும் தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில்

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்தச் சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. தெருநாய்களால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 6, 2025
தி.மலை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <