News September 6, 2025
அரியலூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04329-228844 அணுகலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News September 6, 2025
அரியலூர்: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

அரியலூர் மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
அரியலூர்: ITI, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா?

அரியலூர் மக்களே, திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <
News September 6, 2025
அரியலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிசிடிவி கண்காணிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குற்றங்களைத் தடுக்கும் வகையில் வீடுகள், கடைகள், மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், “மூன்றாவது கண்” எனப்படும் சிசிடிவி கேமரா மூலம் குற்றங்களைத் தடுப்பது சாத்தியம் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.