News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை?

தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில், இன்று காலை <<17627735>>மூத்த தலைவர்களுடன்<<>> அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளாராம்.
Similar News
News September 6, 2025
5 ஆண்டுகளில் இந்த வேலைகள் இருக்காது: Anthropic CEO

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பல்வேறு துறைகளில் தொடக்க நிலை வேலைகளை AI காலி செய்துவிடும் என Anthropic CEO Dario Amodei கணித்துள்ளார். இப்போதே, பல நிறுவனங்கள் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி வெளிப்படையாக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மைக்ரோசாஃப்ட், Nvidia நிறுவன அதிகாரிகள், Dario -வின் கருத்துகளை மறுத்து, AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
News September 6, 2025
இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு?

வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பயிற்சியின் போது, முதன்முறையாக <<17592762>>ஸ்பான்சர்<<>> இல்லாத ஜெர்ஸியை அணிந்து கொண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், பழைய ஸ்பான்சர்ஷிப் ஜெர்ஸிகளை விட, இந்த புதிய டிரெய்னிங் ஜெர்ஸிகள் அருமையாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 6, 2025
BREAKING: பள்ளிகளில் புதிய மாற்றம்.. இனி எல்லாமே ஈசி!

CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய (Integrated Payment System – IPS) போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறை தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே செலுத்தலாம். மேலும், +2 செய்முறை தேர்வுகளுக்கான அனைத்து தரவுகளும் விரைவில் உள்ளீடு செய்யப்பட உள்ளன.