News September 6, 2025
₹450 கோடி விவகாரம்.. சசிகலா மீண்டும் கைதாகிறாரா?

சசிகலாவுக்கு சொந்தமான பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் ₹450 கோடி நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ₹450 கோடி முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் கூறிய தகவலின்படி, பினாமி சொத்து வழக்கின் கீழ் சசிகலாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்த CBI கடந்த மாதம் சென்னை, திருச்சி, தென்காசியில் சோதனை நடத்தியிருந்தது.
Similar News
News September 6, 2025
5 ஆண்டுகளில் இந்த வேலைகள் இருக்காது: Anthropic CEO

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பல்வேறு துறைகளில் தொடக்க நிலை வேலைகளை AI காலி செய்துவிடும் என Anthropic CEO Dario Amodei கணித்துள்ளார். இப்போதே, பல நிறுவனங்கள் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி வெளிப்படையாக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மைக்ரோசாஃப்ட், Nvidia நிறுவன அதிகாரிகள், Dario -வின் கருத்துகளை மறுத்து, AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
News September 6, 2025
இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு?

வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பயிற்சியின் போது, முதன்முறையாக <<17592762>>ஸ்பான்சர்<<>> இல்லாத ஜெர்ஸியை அணிந்து கொண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், பழைய ஸ்பான்சர்ஷிப் ஜெர்ஸிகளை விட, இந்த புதிய டிரெய்னிங் ஜெர்ஸிகள் அருமையாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 6, 2025
BREAKING: பள்ளிகளில் புதிய மாற்றம்.. இனி எல்லாமே ஈசி!

CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய (Integrated Payment System – IPS) போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறை தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே செலுத்தலாம். மேலும், +2 செய்முறை தேர்வுகளுக்கான அனைத்து தரவுகளும் விரைவில் உள்ளீடு செய்யப்பட உள்ளன.