News September 6, 2025

பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

image

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News September 6, 2025

BREAKING: செங்கோட்டையன் பேச்சு குறித்து EPS ஆலோசனை

image

தேனியில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் தங்கியுள்ள EPS, அதிமுக மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், KP முனுசாமி, SP வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், RB உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

News September 6, 2025

₹450 கோடி விவகாரம்.. சசிகலா மீண்டும் கைதாகிறாரா?

image

சசிகலாவுக்கு சொந்தமான பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் ₹450 கோடி நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ₹450 கோடி முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் கூறிய தகவலின்படி, பினாமி சொத்து வழக்கின் கீழ் சசிகலாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்த CBI கடந்த மாதம் சென்னை, திருச்சி, தென்காசியில் சோதனை நடத்தியிருந்தது.

News September 6, 2025

2026-ல் கூட்டணி ஆட்சி: அன்புமணி உறுதி

image

பாமகவில் இன்னும் அப்பா – மகன் மோதல் முடிவுக்கு வராததால், எந்த கூட்டணியில் அக்கட்சி சேர போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெறும் எனவும், கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சின்னம் நம்மிடம் உள்ளதால் நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்றார். யாருடன் கூட்டணி செல்வார்?

error: Content is protected !!