News September 5, 2025

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

image

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார். இவர் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000க் கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 5,000க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 6, 2025

கோயம்பேடு மெட்ரோ-க்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேடில், மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய மர்மநபர், மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News September 6, 2025

சென்னையில் அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை தொடக்கம்

image

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி2025–2026ஆம் ஆண்டுக்கான ஓராண்டு வைணவ அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 14 முதல் 24 வயது வரையிலான, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் parthasarathy.hrce.tn.gov.i இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 6, 2025

மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது!

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த, அரசு ஊழியர் ரஞ்சிதா 3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று (செப்.05) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘3வது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது. குழந்தை பிறப்பின் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே சட்டப்படி விடுப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!