News September 5, 2025
விருதுநகர்: ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
விருதுநகர்: பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்..!

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் 56 வீட்டு காலனி பகுதியில் உள்ள குடோனில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக 5 அட்டை பெட்டிகளில் பேன்சி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 32), முருகன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
News September 12, 2025
விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800
News September 12, 2025
BREAKING: ஸ்ரீவி., போத்தீஸ் கடையில் ஐடி ரெய்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.