News April 10, 2024
சர்ச்சையில் சிக்கிய மெட்ரோ ரயில் நிர்வாகம்

பெங்களூருவில் சுத்தமான ஆடை அணியாத இளைஞரை மெட்ரோ ரயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டையின் மேல் பட்டன் அணியும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், சுத்தமான ஆடை அணிந்து வரும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் போதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததாகவும், பிறகு அனுமதித்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News April 25, 2025
ராசி பலன்கள் (25.04.2025)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – நோய் ➤கன்னி – துன்பம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அமைதி ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – தடங்கல்.
News April 25, 2025
தேசத்துரோக வழக்கில் MLA கைது

பஹல்காம் தாக்குதலில் மோடி, அமித் ஷாவிற்கு தொடர்பிருப்பதாக கூறிய <<16202633>>அசாம் MLA<<>> அமினுல் இஸ்லாமை, அம்மாநில போலீசார் தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். பாக்.கிற்கு ஆதரவாக அவர் பேசிய வீடியோவை பார்த்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, புல்வாமா தாக்குதலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி BJP வெற்றி பெற்றதை போல், பஹல்காம் தாக்குதலிலும் BJP-யின் சதி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News April 25, 2025
தவிக்கும் குணச்சித்திர நடிகர்.. உதவிக்கரம் நீட்டிய கார்த்தி

காலா, ஜெய் பீம் போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகர் சுப்பிரமணி குழந்தைகளின் கல்வி செலவை நடிகர் கார்த்தி ஏற்றுக்கொண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு நிதியுதவி செய்யுமாறு திரைத்துறையினருக்கும் அரசுக்கும் அவரது குடும்பத்தார் கோரிக்கை வைத்த நிலையில் நடிகர் கார்த்தி உதவ முன்வந்துள்ளார்.