News September 5, 2025
பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
மோசமான பட்டியலில் இருந்து தப்பினாரா முருகதாஸ்?

இந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு மிகவும் மோசமானதாகவே அமைந்தது. ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் என அனைவரும் சறுக்கினர். இந்த லிஸ்ட்டில் நாமும் இணைந்துவிடக் கூடாது என ‘மதராஸி’ பட புரமோஷனில் AR முருகதாஸ் உள்பட படக்குழுவே அதிகமாக ஹைப் ஏற்றாமல் இருந்தது. இந்நிலையில், இப்படம் ரிலீஸாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெறுவதால் ARM தப்பித்ததாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்தாச்சா?
News September 6, 2025
BREAKING: இந்தியா – அமெரிக்கா மீண்டும் நெருக்கம்

மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய டிரம்பை பாராட்டுவதாக மோடி தெரிவித்துள்ளார். டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும் USA-வுடன் சாதகமான உறவை தொடர விரும்புவதாகவும் மோடி கூறியுள்ளார். இதனால், இருநாடுகளிடையே மீண்டும் நெருக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை?

தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில், இன்று காலை <<17627735>>மூத்த தலைவர்களுடன்<<>> அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளாராம்.