News April 10, 2024
குமரி: பெண் ஒருவர் திடீர் தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென பெண் ஒருவர் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு எனக்கு நீதி வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணிடம் கேட்டதற்கு கலெக்டர் நேரில் என்னிடம் வந்து கேட்டால் தான் கூறுவேன் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
குமரி: விபத்தில் பெண் உயிரிழப்பு

எஸ்டி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (73). இவர் நேற்று முன்தினம் மாலை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவர் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
குமரி: விபத்தில் பெண் உயிரிழப்பு

எஸ்டி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (73). இவர் நேற்று முன்தினம் மாலை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவர் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
குமரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்.24, 25 அன்று குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதில், பிப்.24 அன்று திருவள்ளுவர் வெள்ளி விழா விரைவு வளைவை திறந்து வைக்கிறார். பின்னர் புத்தளம் பகுதியில் முதல்வர் படிப்பகம் மற்றும் கலைஞர் சிலை, வேப்பமூடு பூங்காவில் பொன்னப்பநாடார் சிலையை திறந்து வைக்கிறார். பிப்.25 அன்று கண்கார்டியா மைதானத்தில் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.


