News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.
Similar News
News September 5, 2025
பெண்களை காக்கும் AUTO AKKA!

சென்னையில் இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த ஆட்டோ அக்காவை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆட்டோ அக்கா எனும் ராஜி கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவில் பாதுகாப்பாக பயணிக்க நினைக்கும் பெண்கள் முதலில் அழைப்பது இவரை தான். அதுமட்டுமல்ல ஏழை எளிய மக்களிடம் இவர் காசு வாங்குவதில்லை. பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனுக்காக ‘இணையும் கைகள்’ என்ற குழுவையும் நடத்தி வருகிறார்.
News September 5, 2025
செங்கோட்டையனை பொருட்படுத்தாத EPS

செங்கோட்டையன் கிளப்பிய புயலுக்கு மத்தியில் EPS தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர்ந்தார். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தது EPS-க்கு நெருக்கடியாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பரப்புரையில் திமுகவை சாடுவதிலேயே குறியாக இருந்தார். OPS, TTV விஷயத்தில் EPS உறுதியாக இருப்பதால், செங்கோட்டையனை பொருட்படுத்த மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News September 5, 2025
அடுத்து GST 3.0.. நிர்மலா சீதாராமன் பகிர்ந்த தகவல்

சாதாரண மக்களின் சுமைகளை குறைப்பதற்காகவே GST 2.0 கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல், வருங்காலத்தில் GST 3.0-ஐ கொண்டு வர இருப்பதாகவும், இதனால் பொருள்களின் விலை மேலும் வெளிப்படைத்தன்மையோடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், GST 3.0 செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.