News September 5, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? உச்சபட்ச அலர்ட்

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு மெஸேஜ் வந்துள்ளது. லஷ்கர் – இ – ஜிகாதி என அறிமுகப்படுத்தி கொண்ட நபர் அனுப்பிய மெசேஜில், 14 பாக்., தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், 34 கார்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்படிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேரை கொல்ல 400 கிலோ RDX வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News September 5, 2025
அடுத்து GST 3.0.. நிர்மலா சீதாராமன் பகிர்ந்த தகவல்

சாதாரண மக்களின் சுமைகளை குறைப்பதற்காகவே GST 2.0 கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல், வருங்காலத்தில் GST 3.0-ஐ கொண்டு வர இருப்பதாகவும், இதனால் பொருள்களின் விலை மேலும் வெளிப்படைத்தன்மையோடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், GST 3.0 செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
News September 5, 2025
உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டு படைகள்.. புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு மற்ற நாடுகள் படைகளை அனுப்பினால், ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அவை இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். ஐரோப்பா உடனான உக்ரைனின் ராணுவ தொடர்பே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு படைகளை அனுப்ப 26 நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றங்கள் 3-ம் உலகப் போருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.