News April 10, 2024
திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது

பிரித்தாலும் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டால் திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரம் செய்த அவர், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என கேள்வி எழுப்பினார். இனம், மதம், சாதியின் பெயரால் திமுக மக்களை தூண்டி விடுகிறது. திமுகவின் மோசமான அரசியலை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் என சூளுரைத்தார்.
Similar News
News August 12, 2025
டெல்லியில் இருந்து நற்செய்தி வருகிறது: அண்ணாமலை

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News August 12, 2025
இறை வழிபாட்டின் முழு பலனை பெற..

வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.
News August 12, 2025
ராகுல் காந்தி கைதுக்கு கமல் கண்டனம்

வெளிப்படைத்தன்மை கேட்டு போராடிய MP-க்களை கைது செய்தது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சமம் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கைதை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம், நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.