News April 10, 2024

உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

image

விளம்பர வழக்கில் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி மீதான அனைத்து புகார்களையும் மாநில அரசுக்கு அனுப்பியதாக தெரிவித்த நீதிபதிகள், புகார் குறித்து ஆய்வாளர்கள் அறிக்கை அளிக்காமல் அமைதி காப்பதைக் கண்டித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News

News August 12, 2025

BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.

News August 12, 2025

தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News August 12, 2025

வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

image

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.

error: Content is protected !!