News September 5, 2025
கள்ளக்குறிச்சி பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9094055559) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 6, 2025
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற இளநிலை உதவியாளர் ரஞ்சிதாவுக்கு மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் விடுப்பு வழங்க உத்தரவிட்டது. மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார்.
News September 5, 2025
இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (செப்டம்பர் 5-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News September 5, 2025
நல்லாசிரியர் விருது பெற்ற திருக்கோவிலூர் ஆசிரியர்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது, திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பாலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதை ஆசிரியருக்கு வழங்கி கவுரவித்தார்.