News September 5, 2025
சென்னை: பெண்களுக்கு முக்கிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-044-23452726. ▶️எழும்பூர்-044-28455168. ▶️கிண்டி-044-24700011. ▶️புளியந்தோப்பு -044-23452523. ▶️தி,நகர்-044-23452614. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.
Similar News
News September 6, 2025
சென்னையில் அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி2025–2026ஆம் ஆண்டுக்கான ஓராண்டு வைணவ அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 14 முதல் 24 வயது வரையிலான, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் parthasarathy.hrce.tn.gov.i இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 6, 2025
மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது!

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த, அரசு ஊழியர் ரஞ்சிதா 3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று (செப்.05) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘3வது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது. குழந்தை பிறப்பின் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே சட்டப்படி விடுப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
News September 5, 2025
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார். இவர் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000க் கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 5,000க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.