News September 5, 2025

ஏன் ஓணம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

image

மஹாபலி என்ற அசுரராஜா, நீதியாலும் அன்பாலும் மக்களை ஆட்சி செய்தார். அவரது புகழால் பொறாமைப்பட்ட தேவர்கள், விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு வாமனராக விஸ்வரூபம் எடுத்து, மஹாபலியிடம் 3 அடியளவு நிலம் கேட்டார். முதல் அடியில் பூமி, 2-ம் அடியில் விண்ணையும், 3-ம் அடிக்கு தன்னையே ஒப்படைத்து தலையை மஹாபலி கொடுத்து, பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். SHARE IT.

Similar News

News March 17, 2026

அதிக வெற்றியை தந்தால் அமைச்சர் பதவி: ஸ்டாலின்

image

திமுக 2.0 ஆட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான் என சீனியர்களுக்கு, ஸ்டாலின் ஷாக் கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் உழைப்பவர்களுக்கு பரிசு நிச்சயம் எனக் கூறிய அவர், அதிக வெற்றியை தேடித்தரும் மாவட்ட செயலாளர்களுக்கே அமைச்சர் பதவி எனவும் கூறியுள்ளார். அதேபோல், மண்டல பொறுப்பாளர்கள் தங்கள் வசமுள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 17, 2026

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

CPI-யின் மதூர் சத்யா மீதான பாலியல் புகார் தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதன்பின், மதூர் சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 17, 2026

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

image

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!