News September 5, 2025
தேனி: பேச்சு போட்டியை அறிவித்த கலெக்டர்

2025-2026-ம் நிதியாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 09.09.2025 அன்றும், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி 10.09.2025 அன்றும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளது என்று தேனி கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT NOW
Similar News
News September 8, 2025
தேனியில்: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

தேனி மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
கூடலூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (70). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரக்கூடிய நிலையில் நேற்று (செப்.7) தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய நிலையில் கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 8, 2025
தேனியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் பஞ்சம்மாள்(55). இவா் கறவை மாடுகள் வளா்த்து வந்தாா். இதில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. மேலும் பஞ்சம்மாளும் அவரது கணவரும் இலவம் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு விற்பனை செய்து வந்த நிலையில் அதிலும் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.