News September 5, 2025
விழுப்புரம்: கார் விபத்தில் 1உயிரிழப்பு ,13 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் வானக்கன்காட்டைச் சேர்ந்த சுரேஷ், அவரது குடும்பத்தினர் & உறவினர் முருகேசன் உட்பட 9பேர், சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருவேல்பட்டு பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற கார் மீது, வேன் மோதி, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் கே கே ரோடு சாலையில் விழுப்புரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார் விழுப்புரம் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தமிழ்ச்செல்வன் என்பது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்த நிலையில் அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை


