News September 5, 2025

கிருஷ்னகிரி: வடமாநில இளைஞர் விபத்தில் பலி

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கோரக்ராம், (39) கிருஷ்ணகிரி, பி.குருபரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பேரிகை-சூளகிரி சாலையில் உள்ள சீகனப்பள்ளி பஸ்ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கோரக்ராம் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 8, 2025

ஓசூர்: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் முதலீடு

image

ஓசூரில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கும் (Maintenance, Repair and Overhaul) வசதி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

News September 8, 2025

கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க

News September 8, 2025

கிருஷ்ணகிரி: 85,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

image

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் செப்.11 மற்றும் 12-ம் தேதிகளில் வருகை தருவதையொட்டி, நேற்று (செப்.7) அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ. மதியழகன், தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 85,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

error: Content is protected !!