News September 5, 2025
ஒரு இனத்துக்கே சுயமரியாதை ஊட்டியவர் பெரியார்: CM

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, CM ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு, இங்கு திறக்கப்பட்ட படம்தான் உதாரணம் என தெரிவித்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து சுயமரியாதையை பரப்பியவர் பெரியார் என்றும் ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் அவர் எனவும் CM கூறியுள்ளார்.
Similar News
News March 20, 2026
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. பரபரப்பு

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக – விசிக இடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று திருமாவளவனை விஜய்யே அழைத்ததாக விசிக மாணவரணி துணை செயலாளர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக வலை விரித்தது விசிகவுக்குத்தான் என அரசியல் நோக்கர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2026
ஈரான் போர்: மத்திய அரசை புகழ்ந்த காங்., MP சசி தரூர்!

ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மெளனம் கோழைத்தனம் அல்ல; சிறப்பான ராஜதந்திரம் எனக் காங்கிரஸ் MP சசிதரூர் புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல், மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுவதாக மற்றொரு MP மணீஷ் திவாரியும் பாராட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் PM மோடி கோழைத்தனமாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி MP-க்கள் அரசை புகழ்ந்துள்ளனர்.
News March 20, 2026
உலக தடகள வரலாற்றில் கால்பதிக்கும் இந்தியா

2028 உலக உள்ளரங்க தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை முதல்முறையாக இந்தியா பெற்றுள்ளது. இதற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு, ஒடிசாவின் புவனேஸ்வர் தேர்வானது. இதன்மூலம் ஜப்பான், கத்தார் & சீனாவை அடுத்து இப்போட்டியை நடத்தும் ஆசியாவின் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக உள்ளரங்க தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை.


